நாம் தமிழர் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் வித்யா ராணி

3647பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா ராணி நேற்று இரவு பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

வித்யா ராணி மேடையில் பேசுகையில், பல்வேறு கட்சியில் வாக்களித்து பெற்று பல ஆண்டுகளாக தமிழகத்திற்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் என்ன செய்திருக்கிறார்கள் என கேள்வி கேட்டு எங்களுக்கு வாக்களியுங்கள். நாங்கள் வெற்றி பெற்றால் குடிநீர் பிரச்சனை, பெண்களுக்கு பல்வேறு பிரச்சனையையும் மத்தியில் பேசி நாங்கள் மருத்துவமனைகளை மேம்படுத்தும் வகையிலும் எங்கள் பணி இருக்கும்.

எங்கள் சின்னம் மைக் சின்னத்தில் வாக்களித்து பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் எங்களை வெற்றி பெற வைக்க வேண்டும். ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். இந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்தி பல்வேறு நலப் பணிகளை சிறப்பாக செயல்படுவோம். மத்திய அரசிடம் போராடி பல்வேறு திட்டங்களை இந்த மாவட்டத்திற்கு பெற்றுத் தருவோம் எனவும் உறுதி அளித்தார் இந்நிகழ்ச்சியில் மண்டல பொறுப்பாளர் பிரபாகரன் உட்பட நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி