கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகர ம. தி. மு. க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகர அவைத்தலைவர் தேவேந்திரன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் தே. மு. தி. க. தலைவர்
விஜயகாந்த் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஓசூர்- தளி சாலையில் ஏ. எஸ். டிசி டெப்போ அருகில் கட்சி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது. இந்த நிகழ்ச்சிகளில், மாநில பொதுக்குழு உறுப்பினர் அழகர்சாமி, மாநகர பொருளாளர் ஞானசேகரன் உள்ளிட் பலர் கலந்து கொண்டனர்.