கருவாடு மீனாகாது; கறந்த பால் மடிபுகாது; நயவஞ்சகம் வெற்றி பெறாது என்று முன்னாள் முதலமைச்சரும், உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், ஒரு மரம் விழுகிறது என்றால் அங்கு பலத்த சத்தம் இருக்கும். சத்தம் எங்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். பொய்மையின் மறுவடிவமாக இருக்கும் நயவஞ்சகம் அகற்றப்பட வேண்டும். 2026 மே வரை பொறுத்திருங்கள். தமிழ்நாட்டை ஆளப்போவது யார் என்று தெரியும் என கூறியுள்ளார்.