9 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாததால் மாணவன் தற்கொலை

54பார்த்தது
9 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாததால் மாணவன் தற்கொலை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருங்கலாப்பள்ளி நேரு காலனியைச் சேர்ந்தவர் சங்கர் மகன் மகேந்திரன் (16). கோமாளிப்பாறை உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த மகேந்திரன் ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி ஆகாததால் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என வருத்தத்துடன் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று பள்ளி திறப்பு நாள் என்பதால் காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்குத்தானே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் மகேந்திரனை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார். சங்கர் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரணை.

தொடர்புடைய செய்தி