பெட்டிக்கடை அருகே மது விற்றவர் கைது

51பார்த்தது
பெட்டிக்கடை அருகே மது விற்றவர் கைது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து மகன் செல்வராஜ் (44). இவர் ஈச்சம்பட்டியில் உள்ள தனது பெட்டிக்கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த குளித்தலை போலீசார் மது விற்ற செல்வராஜ் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி