50 ஆண்டுகாலம் மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகள்.

76பார்த்தது
50 ஆண்டுகாலம் மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகள். குடிநீர் வசதி கூட கிராமங்களில் ஏற்படுத்தி தரவில்லை. செந்தில்நாதன் குற்றச்சாட்டு.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் செந்தில் நாதன். இன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணவாடி- மருதம்பட்டி காலனி, ஏமூர் நடுப்பாளையம் காலனி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வேட்பாளர் செந்தில்நாதன் பிரச்சாரம் மேற்கொண்டார்.


அவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பொது மக்களிடையே பேசிய செந்தில்நாதன், கடந்த 50 ஆண்டுகளில் மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் கிராமங்களில் அடிப்படை வசதியான குடிநீர் வசதி கூட ஏற்படுத்தி தரவில்லை.

பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, வாக்காளர்களிடம் ஓட்டை பெறுவதற்காக, ரூ. 1, 000- கொடுத்து, ஓட்டை பெற்ற பிறகு அவர்கள் அப்பகுதியை திரும்பி கூட பார்ப்பதில்லை.

அடித்தட்டு மக்கள் எப்போதும் அடித்தட்டு மக்களாகவே இருக்க வேண்டும். ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவே இருக்க வேண்டும்.

இதையெல்லாம் மாற்றுவதற்கான மாற்றத்தை மக்கள் ஏற்படுத்த வேண்டும்.

இந்த மண்ணுக்கு பெருமை தேடி தர வேண்டும் என்றால் நீங்கள் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி