வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

2281பார்த்தது
கரூர் மாவட்டத்தில் வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. ஆறு மணி வரை வாக்காளர்கள் வாக்கு செலுத்த அனுமதித்த அதிகாரிகள் ஆறு மணி முடிந்தவுடன் வாக்குப்பதிவை நிறுத்தினர். இதன் அடிப்படையில் கரூர் நகர் மன்ற கோட்டைமேடு உயர்நிலைப் பள்ளியில் செயல்பட்ட வாக்கு மையத்தின் கதவுகளை மூடினார்.

இதனை தொடர்ந்து மின்னனு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தை தனித்தனியாக எடுத்து, பதிவான வாக்குகள் குறித்து குறிப்புகள் எடுத்துக் கொண்டனர். தேர்தல் அதிகாரிகள் பூத் ஏஜென்ட் களிடம் இதனை தெரிவித்து வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அதிகாரிகள் பூத் ஏஜென்ட்கள் முன்னிலையில் சீல் இட்டனர்.