தாந்தோணி மலை பகுதியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி

2621பார்த்தது
மக்களுடன் முதல்வர் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு முகாம்கள் மூலம் வருவாய்த்துறை, மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகள் சார்பாக பொதுமக்களிடம் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கோவையில் சிறப்பு முகாமை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்து மனுக்களை பெற்று தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மனுக்கள் பெரும் முகம் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணி மலை பகுதியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர். இதனை கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள், அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி