தென்னிமலை: அரசு பஸ் மோதி டூவீலரில் சென்றவர் பலி

85பார்த்தது
தென்னிலை அருகே டூவீலர் மீது அரசு பேருந்து மோதி விபத்து. ஒருவர் உயிரிழப்பு.

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, அத்திப்பாளையம் அருகே உள்ள தொப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராக்கப்பன் வயது 70. இவர் ஜூன் 8-ம் தேதி காலை 8 மணி அளவில், கரூர் - கோவை சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவர் தென்னிலை பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, எதிர் திசையில் வந்த அரசு பேருந்து, ராக்கப்பன் ஒட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ராக்கப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த ராக்கப்பனின் மகள் காந்திமதி வயது 43 என்பவர், இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த ராக்கப்பன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, அரசு பேருந்தை, வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சதீஷ் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி