நல்லாம்பட்டி-பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

77பார்த்தது
நல்லாம்பட்டியில் பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, புங்கம்பாடி கீழ்பாகம் ஊராட்சியில் உள்ள நல்லாம்பட்டியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு
ஸ்ரீ விநாயகர்
ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோவில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா இன்று அதிகாலை மங்கல இசையுடன் துவங்கியது. பின்னர் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் மூல மந்திரஹோமம், மாலா மந்திர, காயத்ரி மந்திர, ஜெப ஹோமங்கள், 216 வகையான ஹோம திரவிய ஹோமம் உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை எடுத்துச் சென்று கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி