நடந்து சென்ற முதியவர் எதிர்பாராமல் கீழேவிழுந்து உயிரிழப்பு.

57பார்த்தது
சின்னதாதம் பாளையத்தில் நடந்து சென்ற முதியவர் எதிர்பாராமல் கீழே விழுந்து உயிரிழப்பு.


கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, விசுவநாதபுரி, கொளத்தூர் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமன் வயது 70.

இவர் ஏப்ரல் 6-ம் தேதி இரவு 8 மணி அளவில், சின்ன தாதம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றபோது, எதிர்பாராத விதமாக கால் இடறி கீழே விழுந்தவர் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தவர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 10ஆம் தேதி மதியம் 12 மணியளவில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் அறிந்த ராமனின் மகன் வேலுச்சாமி வயது 48 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த ராமனின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
க. பரமத்தி காவல் துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி