ஆத்துப்பாளையம் அணை- தண்ணீர் திறந்து விட்ட ஆட்சியர் தங்கவேல்

1925பார்த்தது
ஆத்துப்பாளையம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்ட மாவட்ட ஆட்சியர் தங்கவேல்

கரூர் மாவட்டம், நீர்வளத்துறை சார்பில் இன்று ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் திறந்து வைத்தார். உடன் அரவக்குறிச்சி எம. எல். ஏ. இளங்கோ இருந்தார். நொய்யல் பிரதான கால்வாயில் 60 கன அடி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நீரின் அளவு படிப்படியாக உயர்த்தி 90 கன அடி வரை தண்ணீர் விடப்படும்.

மொத்தம் 19480 ஏக்கர் புஞ்சை நிலங்களுக்கு பாசனவசதி அளிக்கிறது. இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் அஞ்சூர், துக்காச்சி, கார்வழி, தென்னிலை, முன்னூர், அத்திப்பாளையம், குப்பம், புன்னம், வேட்டமங்கலம், புஞ்சைபுகளூர், புஞ்சைதோட்டக்குறிச்சி, ஆத்தூர், புஞ்சைகடம்பக்குறிச்சி, மண்மங்கலம், குப்பிச்சிபாளையம், மின்னாம்பள்ளி, காதப்பாறை, பஞ்சமாதேவி ஆகிய கிராமங்கள் பயனடைகின்றன என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கீழ்பவானி வடிநில உபகோட்டம் காங்கயம், உதவி செயற்பொறியாளர் அப்புசாமி, பாசன பிரிவு க. பரமத்தி உதவி பொறியாளர் சதீஸ்வரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி