குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி சடலமாக மீட்பு

586பார்த்தது
குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி சடலமாக மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலையத்துக்கு உட்பட்ட குழிவிளை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்( 61 ). , தொழிலாளி, இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகாமையில் உள்ள பறம்புக்கோடு குளத்தின் கரையில் உள்ள கலுங்கில் படுத்துள்ளார்.

அப்போது அவர் எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்துள்ளார், அதில் அவர் குளத்துக்குள் மூழ்கியுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் குழித்துறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் குளத்துக்குள் இறங்கி தேடினர். ஆனால் வெங்கடேசனை கண்டுபிடிக்க முடியவில்லை இதனால் நேரம் இருட்டியதால் தேடுவதை நிறுத்திவிட்டு நேற்று காலையில் மீண்டும் தேடத் தொடங்கினர்.

இதை அடுத்து அவரை சடலமாக மீட்டனர், பின்னர் அவரது உடலை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி