திருவட்டார் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் 26-வது ஆண்டு திருவிழா கடந்த 23. ந்தேதி துவங்கி நடந்து வருகிறது.
ஆறாம் நாளான நேற்று நாதஸ்வரம், நையாண்டி மேளத்துடன் அம்மன் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி திருப்பாதக்கடவு, ஆதிகேசவப்பெருமாள் கோவில், தளியல் முத்தாரம்மன் கோவில், வழியாக சென்று கோவிலுகுத்திரும்புதல், தொடர்ந்து பறக்கும் காவடி, தேர்க்காவடி, கதிர்வேல் காவடி, கன்னவேல் என வேல் காவடி தரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.