கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி தலைமையாசிரியை ரெனிதா தலைமையில் நடந்தது. நகர்மன்ற துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியைகள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.