ரேஷன் கட்டிடத்தை திறக்க கேட்டு பாஜக எம் எல் ஏ போராட்டம்

60பார்த்தது
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வட்டவிளை பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. வாடகை கட்டிடத்தில் கடை இயங்குவதால் கடந்த 2019 - 2020 ம் ஆண்டு அப்போதைய மேல் சபை உறுப்பினராக இருந்த விஜயகுமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதி பரிந்துரையில் பேரில் பொது விநியோகத் திட்டத்திற்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டது.  

      ஆனால் கட்டி முடிக்கப்பட்டு தற்போது வரை இந்த கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடையை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என வலியுறுத்தி நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி இன்று (27-ம் தேதி)  கட்சி நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்களுடன் நியாய விலை கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  

      தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி