குமரி: மருந்துக்கடையில் ஓட்டை பிரித்து பணம் திருட்டு.

57பார்த்தது
பூதப்பாண்டி அருகே உள்ள மணத்திட்டை மெயின்ரோடு பகுதியை சேர்த்தவர் சுதாகர் (வயது57). இவர் திட்டுவிளை மெயின்ரோடு பகுதியில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் கடையை திறந்து உள்ளே சென் றார். அப்பேது கடையின் மேற்கூரையான ஓடு பிரிக்கப்பட்டு இருப்பதை கண்கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், அங்கு மேஜையில் வைத்திருந்த ரூ. 7, 800 மற்றும் கண்காணிப்பு கேமரா ஹார்ட்டிஸ்க் உள்ளிட்டவையும் மாயமாகி இருந்தது. நள்ளிரவில் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் பணம் மற்றும் கண்காணிப்பு கேமரா ஹார்ட்டிஸ்க் ஆகிய வற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுதாகர் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி