பூதப்பாண்டி அருகே பூச்சி மருந்து குடித்த முதியவர் சாவு.

81பார்த்தது
பூதப்பாண்டி அருகே பூச்சி மருந்து குடித்த முதியவர் சாவு.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள எட்டாமடை தோமையார்புரம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது68), விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலையில் பால்ராஜ் தனது தோட்டத்தில் வாழை மரத்துக்கு அடிப்பதற்காக பூச்சி மருந்து கலந்து ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்திருந்தாக தெரிகிறது. அதனை தவறுதலாக எடுத்து குடித்துள்ளார். இதனால் பால்ராஜ் வாந்தி எடுத்துள்ளார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மரிய செல்வி உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பால்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி