துப்புரவு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாண்டு பரிசு.

82பார்த்தது
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்த விதைகள் அமைப்பு.



காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 70 க்கும் மேற்பட்ட துப்புரவு, தூய்மை பணியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் வருகின்ற 2024 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விதைகள் தன்னார்வ அமைப்பு சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் பணியாற்றும் துப்புரவு தூய்மை பணியாளர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்களுக்கு சிறப்பு பரிசு பொருள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இதில் அந்த பேரூராட்சியின் வார்டு உறுப்பினர் வெங்கடேசன் கலந்துகொண்டு பரிசு தொகுப்புகளை வழங்கினார்.

புத்தாண்டை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு விதைகள் தன்னார்வலர்கள் சிறப்பு பொருள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தது கவுரவித்தது துப்புரவு பணியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி