அனந்தமங்கலம் கிராமத்தில், வரும் இன்று (அக்.,8) மனுநீதி நாள் முகாம் நடக்கிறது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை: மாதந்தோறும் நடத்தக்கூடிய மனுநீதி நாள் முகாம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில், மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, மதுராந்தகம் தாலுகாவில், அனந்தமங்கலம் கிராமத்தில், மனுநீதி நாள் முகாம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், வரும் 9ம் தேதி, புதன் கிழமை காலை 10: 00 மணிக்கு நடக்கிறது. இதில், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளதால், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.