ஆதார் இணைப்பில் அரசு வேலை ஒப்பந்த தொழிலாளர்கள் புகார் மனு

73பார்த்தது
ஆதார் இணைப்பில் அரசு வேலை ஒப்பந்த தொழிலாளர்கள் புகார் மனு
திருப்போரூர் காவல் நிலையத்தில், ஆதார் இணைப்பில் அரசு வேலை என்று வருவதால், அரசு நலத் திட்டங்களை பெற முடியவில்லை என, 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

திருப்போரூர் அடுத்துள்ள ஆலத்தூர் கிராமத்தில், சிட்கோ தொழிற்பேட்டை வளாகம் உள்ளது. இங்கு, 30க்கும் மேற்பட்ட உயிர்காக்கும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சிட்கோ வளாகத்தில் அரசுக்கு சொந்தமான 'டாம் கால்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இதில், 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில், பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறோம்.

இந்நிலையில், தொழிலாளர்களின் ஆதாரில் தமிழ்நாடு அரசு பொதுத் துறை நிறுவன ஊழியர்கள், ஒய்வூதியம் பெறும் நபர்கள் என, ஆன்லைனில் வருவதால் மகளிர் உரிமைத்தொகை, கல்வி ஊக்கத்தொகை, விதவை உதவித்தொகை உட்பட பல்வேறு அரசு திட்டங்கள், சலுகைகள் கிடைக்கவில்லை. இதற்கு, தனியார் நிறுவனம் மற்றும் ஒப்பந்த நிறுவனம் தான் காரணம் என தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி