"காஞ்சி பட்டு சேலைகள் விலை கிடுகிடு உயர்வு

549பார்த்தது
"காஞ்சி பட்டு சேலைகள் விலை கிடுகிடு உயர்வு
காஞ்சிபுரம், தங்கம், வெள்ளி விலையேற்றம் காரணத்தால், ஜரிகை விலையும் உயர்ந்து, காஞ்சிபுரம் பட்டு சேலைகள், 30 சதவீதம் வரை விலை ஏறியுள்ளது.

காஞ்சிபுரத்தில் கைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் உலக புகழ் பெற்றவை. மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய பட்டு சேலைகள் உற்பத்தி, பல்வேறு காரணங்களால், நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகிறது. தங்கம், வெள்ளி போன்ற பொருட்கள் இணைத்து உற்பத்தி செய்யப்பட்ட ஜரிகையை பயன்படுத்தி, பட்டு சேலைகள் நெய்யப்படுவதால், 25 ஆண்டுகளுக்கு மேலாகவும், காஞ்சிபுரம் பட்டு சேலைகள் தரமாக உள்ளன.

இதன் காரணமாக, தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா, வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் காஞ்சிபுரம் வந்து பட்டு சேலை வாங்கி செல்கின்றனர். கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் கடைகள் மூலமாக, ஆண்டுக்கு சராசரியாக 300 கோடி ரூபாய்க்கு பட்டு சேலை வியாபாரம் காஞ்சிபுரத்தில் நடக்கிறது. ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலை குறைந்தபட்சம் 10, 000 ரூபாய்க்கும், அதிகபட்சம் 1. 5 லட்சம் ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகின்றன.

ஜரிகை உற்பத்தியில், தங்கமும், வெள்ளியும் முக்கிய மூலப்பொருட்களாக உள்ளன. காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள தமிழ்நாடு ஜரிகை ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஜரிகையில், 0. 5 சதவீதம் தங்கமும், 40 சதவீதம் வெள்ளியும், 35. 5 சதவீதம் காப்பரும், 24. 0 சதவீதம் பட்டு இழையும் உள்ளது.

தொடர்புடைய செய்தி