சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 23. 70 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணியை மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவர்கள் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வையாவூர், புக்கத்துறை, இப்பகுதிகளில் பேருந்து நிழற்குடை அமைத்து தர கோரி பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர் அதன் பேரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் 16 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய பேருந்து நிழல்கூடை கட்டுமான பணியை துவக்கி வைத்தார்
அதேபோல் குமாரவாடி பகுதியில் கலையரங்கம் கட்டி தரக்கோரி சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் அதன் பேரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 7. 70 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்காக பூமி பூஜை பணியை மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வையாவூர் வி. ஜி. குமரன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு கட்டுமான பணியை பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.