மாநகரப் போக்குவரத்து கழகப் பேருந்து அவல நிலை

63பார்த்தது
செங்கல்பட்டு மாவட்ட தலைநகர் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரத்திற்கு நாள்தோறும் எழுவதற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் சென்னையை நோக்கி செல்வதற்கு மிக முக்கிய பேருந்து வழித்தடமாக செங்கல்பட்டு-தாம்பரம் உள்ளது ‌.


அனைத்து நாட்களிலும் காலை மற்றும் மாலை வேலைகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவது குறிப்பிடத்தக்கது ‌

தற்பொழுது மாநகர பேருந்துகளில் கதவுகள் அமைக்கப்பட்டு விட்டதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை மற்றும் மாநகர போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது ‌


இந்தநிலையில் தற்பொழுது முறையாக கதவுகள் அமைக்கப்படாமல் ஓட்டை உடைச்சல் பேருந்தில் ஓட்டை உடைசல் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

கதவுகள் இருப்பது பொதுமக்கள் யாராவது தவறி விழாமல் இருப்பதற்காக என்பது கூட தெரியாமல் ஓட்டை உடைச்சில் கதவுகளை வைத்து பேருந்துகளை இயக்குவது பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி