மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் செய்த நபர் கைது

1539பார்த்தது
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை மதுபோதையில் கூட்டுபாலியல்பலாத்காரம் செய்த வழக்கில் கைது

வேட்டைக்கார குப்பம் பகுதியில் கடந்த 15ஆம் தேதி மனநல பாதிக்கப்பட்ட பெண் 31‌. கடந்த 16ஆம் தேதி பெண்ணின் தாயார் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை குளிப்பாட்டி உள்ளார். அப்பொழுது உடம்பில் பல்வேறு பகுதிகளில் காயம் இருந்துள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உடனடியாக பெண்ணின் தாயார் செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட செய்யூர் போலீசார் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி 24, தினேஷ்27, விக்னேஷ்23 ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்து விசாரணை செய்தனர். இதில் விசாரணையில் பெண்ணை ஏமாற்றி ஏரிக்கரை பகுதிக்கு அழைத்துச் சென்று மூன்று பேரும் கூட்டுப் பாலியல் செய்ததாக ஒப்புக்கொண்டு உள்ளனர்.

இதை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் மூன்று பேரையும் செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை மதுபோதையில் இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மது மற்றும் கஞ்சா போதையில் சுற்றுவட்டார கிராம இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.