தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி

59பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜா வெள்ளையன் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அவர் பேசுவையில் வருகின்ற மே மாதம் ஐந்தாம் தேதி கோவையில் 41 வது வணிகர் தின விழா மாநாடு பேரவை மாநில தலைவர் வெள்ளையன் தலைமையில் நடைபெற உள்ளது இந்த மாநாட்டின் வாயிலாக மத்திய மாநில அரசுகளுக்கு ஒரு சில தீர்மானங்கள் கொண்டு செல்ல உள்ளது குறிப்பாக தற்போது நடைபெற்ற முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவின்போது சில்லறை வணிகர்களிடமிருந்து தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட பணங்களை எந்த ஒரு நிபந்தனைகள் இல்லாமல் அந்த பணங்களை சில்லறை வணிக வியாபாரிகளிடம் வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடை உரிமையாளர் லைசன்ஸ் புதுப்பிக்க வேண்டும் அல்லது புதியதாக வாங்க வேண்டும் என்றால் அந்த பில்டிங்கின் ஓனர் உடைய சொத்து மதிப்புகளை கொடுக்க வேண்டும் என நிபந்தனை வைக்கிறார்கள்.
எப்படி கடை உரிமையாளர்கள் அவர்களின் சொத்து மதிப்பை எப்படி வழங்குவார்கள் எனவே இதை அறவே அகற்ற வேண்டும்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை கடந்த 15 ஆண்டுகளாக ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து வருகிறது ஆகையால் தான் கோவையில் நடைபெறும் மாநாட்டிற்கு ஆன்லைன் கார்ப்பரேட் ஆதிக்க எதிர்ப்பு மாநாடு என இந்த மாநாட்டிற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி