காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே பாமக தலைவர் பிரச்சாரம்

62பார்த்தது
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே பாமக தலைவர் பிரச்சாரம்
தேசிய ஜனநாயக கூட்டணியின் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே பாமக மாவட்ட தலைவர் மகேஷ் குமார் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றி பொது மக்களுக்கிடையே வாக்குகள் சேகரித்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கடந்த 50 ஆண்டுகளாக திமுக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் எனவும் மாற்றத்தை காணவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதியிடம் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூட கோரிக்கை விடுத்த போது , கடந்த 2016 தேர்தலில் திமுக மதுக்கடைகளை மூடுவோம் என கூறி வாக்குறுதி அளித்த போது திமுகவிற்கு வாக்களித்தீர்களா என அவர்களிடம் திருப்பிக் கேட்டார்.
மக்களுக்கு ஓட்டு போட்டால் மட்டும் தானா நல்லதை செய்வீர்கள்? தங்களுக்கு என்ற கொள்கை இல்லையா? எனவும் , கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சி மதுவிலக்கு என்ற ஒரே கொள்கையை முன்னிறுத்தி வருவதால் தான் தற்போது வரை எங்களை ஏற்றுக்கொள்ள தயங்குகின்றனர் ஆனாலும் எல்லா இழப்புக்களையும் சந்தித்து தற்போது வரை அதே கொள்கை பிடிப்புடன் எங்களது நிறுவனரும் தொண்டர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி