ரிஷிவந்தியம் - Rishivandiyam

கள்ளக்குறிச்சி: விடுதி கட்டுமானம்; கலெக்டர் பிரசாந்த் ஆய்வு

கள்ளக்குறிச்சி: விடுதி கட்டுமானம்; கலெக்டர் பிரசாந்த் ஆய்வு

கள்ளக்குறிச்சி அடுத்த நாகலூரில் நபார்டு திட்டத்தின் கீழ் பொதுப்பணித் துறை மூலம் புதிய மாதிரி பள்ளி, மாணவர் மற்றும் மாணவியர் விடுதி கட்டுமான பணிகள் 56.47 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தபின் கூறியதாவது: மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், புதிய கட்டடங்கள் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  தற்போது நாகலூரில் 19.33 கோடி ரூபாயில் மாதிரி பள்ளி, 37.14 கோடி ரூபாயில் தனித்தனியாக மாணவர் மற்றும் மாணவியர் விடுதி கட்டப்பட்டு வருகிறது. இதில், மாணவியர் விடுதியில் 392 பேர் தங்கிப் பயிலும் வகையில் 4 தளங்களில் மாணவிகள் தங்கும் அறைகள், காப்பாளர் அறை, சாப்பாட்டுக் கூடம், சமையல் அறை, பொருட்கள் வைப்பறை, 2 லிப்ட் என பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. அதேபோல் மாணவர் விடுதியும் கட்டப்படுகிறது. தற்போது 70 சதவீதப் பணிகள் நிறைவுபெற்றுள்ளது.  முழுமையாகப் பணி முடிந்ததும், தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் மாதிரி பள்ளி சொந்தக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டு செயல்படும். மேலும், மாதிரி பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் தயார்படுத்தப்படுவார்கள். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி