"இது பெரியார் மண் என்பது நிரூபணம் ஆகியுள்ளது" - கி வீரமணி

1089பார்த்தது
"இது பெரியார் மண் என்பது நிரூபணம் ஆகியுள்ளது" - கி வீரமணி
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்கு திராவிட கழகத் தலைவர் கி வீரமணி வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “மீண்டும் இது பெரியார் மண்தான் என்பதையும், “திராவிடம் வெல்லும் - அதை வரலாறு சொல்லும்” என்பதையும் நிரூபித்துவிட்டார் நமது ஒப்பற்ற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அவரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அவரது கடும் உழைப்பும், திட்டமிட்ட வியூகமும் தான் தந்த வெற்றி கனிகள் இவை” என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி