மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. குவாலியர் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி ஒருவரை சில இளைஞர்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். ரயிலில் இருந்து போர்வைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை திருடியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்கள் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. அந்த ஊனமுற்ற நபர், துவைத்த படுக்கை விரிப்புகள் மற்றும் போர்வைகளை பெட்டியில் வைத்திருந்த தொழிலாளி என அடையாளம் காணப்பட்டார்.