ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மதசார்புள்ள கோவில்கள், சர்ச்சுகள் என எந்த ஒரு இடத்திலும் கூட்டத்தை நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.