சுவையான கரும்பு பாயாசம் செய்முறை இதோ

558பார்த்தது
சுவையான கரும்பு பாயாசம் செய்முறை இதோ
பொங்கல் பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு சட்டென வருவது கரும்பு தான். அதனை வைத்து கரும்பு பாயாசம் எப்படி செய்வது என்று தான் பார்க்க போறோம். தேவையான பொருட்கள் கரும்பு ஜூஸ்- 500 மிலி, அரிசி- 1/4 கப் , நெய்- 2 தேக்கரண்டி, முந்திரி- ஒரு கைப்பிடி அளவு, திராட்சை- ஒரு கைப்பிடி அளவு, பால் - 5 தேக்கரண்டி. செய்முறை: பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி , திராட்சையை சேர்த்து வறுக்க வேண்டும். அதனை எடுத்துவிட்டு கரும்பு சாறை அதே பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். கரும்பு சாறு நன்கு கொதிக்கும் போது அதில் பாலை சேர்க்க வேண்டும். அடுத்ததாக அரிசியை அதில் செக்க வேண்டும். அரிசி நன்றாக வெந்த பின்பு வறுத்த முந்திரி, திராச்சை கரும்பு பாயசம் ரெடி.

தொடர்புடைய செய்தி