கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு, சங்க மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். போராட்டத்தில், சாகுபடி நில பட்டதாரர்களுக்கு மட்டுமே மானியம், கடன், நிவாரணம் மற்றும் காப்பீடு திட்டம் கிடைக்கின்றன. அரசின் திட்டங்கள் மற்றும் நிதி உதவியை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.