தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4.35 மணிக்கு தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
விஜயகாந்த் உயிர் இன்று காலை 6:10 மணியளவில் பிரிந்ததாக தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். இன்று முழுவதும் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது. நாளை மாலை 4.35 மணிக்கு தேமுதிக கட்சி அலுவலகத்தின் முன்புறம் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.