பலாப்பழத்தை தேடி ஈக்கள் தான் வரும் - செல்லூர் ராஜு

83பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அனைத்துக் கட்சி தலைவர்களும் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், செல்லூர் ராஜு தனது குடும்பத்தினருடன் வாக்கு செலுத்தினார். பின்னர் அங்கிருந்த செய்தியாளர், ஓபிஎஸ் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அவர், “பலாப்பழத்தை தேடி ஈக்கள் தான் வரும் அதிமுக தொண்டன் ஒருவன் கூட போக மாட்டான்” என கூறியுள்ளார்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி