உச்சகட்ட போதையில் இளம்பெண் அலப்பறை (வீடியோ)

114051பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையின் ஓரமாக இளம் பெண் ஒருவர் அளவு கடந்த மது போதையில் விழுந்து கிடந்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீரை ஊற்றி எழுப்பினார். மது போதையில் இருந்து தெளிந்த அந்தப் பெண்ணிடம், 'நீ யாருமா..? எந்த ஊரு என்று கேட்டதற்கு பதில் கூறாமல் மது போதையில் தள்ளாடியபடி பரபரப்பான சாலையின் நடுவே நடக்க தொடங்கினார்.வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக சாலைகளின் நடுவே நடந்து சென்ற அந்த பெண், நடக்க முடியாமல் நின்றிருந்த லாரியில் தலைவைத்து மயங்கினார். அதன் பின்னர் மீண்டும் மயக்கம் தெளிந்த அந்த இளம் பெண், அவ்வழியாக ஒட்டன்சத்திரம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறி சென்றார்.

தொடர்புடைய செய்தி