பெரியார் பல்கலை துணைவேந்தர் பதவிக் காலம் நீட்டிப்பு

59பார்த்தது
பெரியார் பல்கலை துணைவேந்தர் பதவிக் காலம் நீட்டிப்பு
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக் காலத்தை அடுத்த ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். ஜெகநாதனின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் தயாரித்து தனியாரிடம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டதாக ஜெகநாதன் மீது புகார் எழுந்து பெரும் சர்ச்சை எழுந்தது. ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்க விட மாட்டோம் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார். இந்த நிலையில், தமிழக அரசின் எதிர்ப்பை மீறி, ஜெகநாதனுக்கு மே 19, 2025 வரை பணி நீட்டிப்பு செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி