தாளவாடியில் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்

63பார்த்தது
தாளவாடியில் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் மழையில் நனைந்தபடி பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள். தற்போது தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இவ்வாறு பள்ளி மாணவர்கள் பயணம் செய்வது குறித்து பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த அவல நிலையை பற்றி பலமுறை புகார் அளித்தும் சற்றும் கண்டுகொள்ளாத ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தாளவாடி போக்குவரத்து அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி