குன்னத்தூர் அருகே  கணவன், மனைவி தூக்குபோட்டு தற்கொலை

2967பார்த்தது
குன்னத்தூர் அருகே  கணவன், மனைவி தூக்குபோட்டு தற்கொலை
குன்னத்தூர் அருகே கணவன், மனைவி இருவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குன்னத்தூர் அருகே உள்ள கருமஞ்சிரை, காலனி சேர்ந்தவர் ரங்கசாமி மகன் முத்துக்குமார் (21) இவரது மனைவி சந்திரா (20). இருவருக்கும் திருமணம் ஆகி 6 மாதம் ஆன நிலையில், சந்திரா 3 மாதம்  கர்ப்பிணியாக இருந்துள்ளார். கல்யாணம் ஆனதில் இருந்து இருவருக்குள் அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டில் தூங்க சென்றனர்.

பின்னர் நேற்று காலை வெகு நேரம் ஆகியும் இருவரும் எழுந்து வராததால் முத்துக்குமாரின் பெற்றோர் கதவை தட்டிப்பார்த்தும் வராததால் வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்துள்ளனர். அப்போது 2 பேரும் தூக்கு போட்டு இருந்ததால் அக்கம், பக்கம், உறவினர்கள் உதவியுடன் கீழே இறக்கி பார்த்தபோது இருவரும் உயிரிழந்த நிலையில் இருந்தனர். இச்சம்பவம் குறித்து குன்னத்தூர் போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் குன்னத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.