பெருந்துறை அருகே கிணற்றில் விழுந்து தொழிலாளி தற்கொலை.

64பார்த்தது
பெருந்துறை அருகே கிணற்றில் விழுந்து தொழிலாளி தற்கொலை.
பெருந்துறையை அடைத்துள்ள துடுப்பதி அருகே சொத்து தகராறு காரணமாக கிணற்றில் விழுந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெருந்துறையை அடுத்துள்ள பாலக்கரை, தோப்புபாளையத்தை சேர்ந்தவர் ஸ்டாலின், (50) விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள இவருக்கு சகோதரர்களிடையே சொத்து தகராறு இருந்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் மாலை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஸ்டாலின், அருகிலுள்ள பாழடைந்த கிணற்றில் குதித்து விட்டார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினால் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு துறையினக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் அவரை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற் கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி