அதிமுக வேட்பாளர் அசோக்குமார் தனது வாக்கினை பதிவு செய்தார்

4211பார்த்தது
ஈரோடு பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோளங்கபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், வாக்காளர்களுடன் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அப்போது, தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவுகள் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் ஒத்துழைப்பு நல்ல முறையில் உள்ளதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்தி