கோபிசெட்டிபாளையம் அருகே தொழிலாளி தற்கொலை

76பார்த்தது
கோபிசெட்டிபாளையம் அருகே தொழிலாளி தற்கொலை
கோபிசெட்டிபாளையம் கபிலர் வீதியை சேர்ந்தவர் காளிமுத்து வயது 50 கூலித் தொழிலாளி இவருடைய மனைவி மகாலட்சுமி வயது 40 கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் மனைவி இருவரும் கடந்த பத்தாண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் இதனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான காளிமுத்து மனமுடைந்து காணப்பட்டார் இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் விஷம் குடித்துவிட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் நேற்று காளிமுத்து உயிரிழந்து விட்டார் இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி