தவறான சிகிச்சை... பெண் கண்ணீர் மல்க மனு

6317பார்த்தது
ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் குமார். அவரது மனைவி அனுபல்லவி. இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில் அனுபல்லவி கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது,

கடந்த 22ஆம் தேதியன்று தாளவாடி அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் முகாம் நடத்தப்பட்டது. என்னுடன் சேர்த்து எட்டு பேர் அன்று குடும்ப கட்டுப்பாட்டு ஆபரேஷன் செய்வதற்காக அட்மிட் ஆகி இருந்தோம். பின்னர் மதியத்தில் ஆபரேஷன் செய்யப்பட்டு சுய நினைவின்றி இருந்தேன்.

பின்னர் சுயநினைவு வந்தபோது கோவை தனியார் மருத்துவமனை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு 25 நாள் ஐசி வார்டில் இருந்துள்ளதாகவும், பிறகுதான் அங்கிருந்து மருத்துவர்கள் எனக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்வதற்கு பதிலாக என்னுடைய இருதயத்துக்கு ரத்தம் செல்லும் லேயரை துண்டித்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் எனக்கு அடிக்கடி ஜன்னி மயக்கம் தொடர்ந்து இருதய நோய் பிரச்சனை ஏற்பட்டு தற்போது மருத்துவர்கள் எனது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை ஏற்படலாம் என்று கூறியுள்ளனர். இதனால் தினமும் உடல் உறுப்புகளை சிதைத்து தினமும் உடல் உபாதிகளுடன் போராடிக் கொண்டு வருகிறேன்.

எனவே தவறான ஆப்ரேட் செய்த மருத்துவர் மீது நடவடிக்கை மேற்கொண்டு எனக்கும் எனது குழந்தைகளுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி