லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து 4 மணி நேரம் பாதிப்பு

55பார்த்தது
திம்பம் மலைப்பாதை 15வது கெ கொண்டை ஊசி வளைவில்
லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து 4 மணி நேரம் பாதிப்பு

திம்பம் மலைப்பாதை 15வது கொண்டை ஊசி வளைவில் லாரி ரோட்டில் கவிழ்ந்து 4 மணி நே நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு வாகன ஓட்டிகள் அவதி
ஈரோடு மாவட்டம், சத்தி அடுத்துள்ளது திம்பம் மலைப்பாதையில் 27 அபாயகரமான கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஏராமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் ஈரோட்டில் இருந்து மைசூருக்கு காபிக் கொட்டை லோடு ஏற்றி சென்ற லாரி நேற்று காலை திம்பம் மலைப்பாதை 15 வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது. விபத்து காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து 4 மணி நேரம் பாதிக்கப்பட்டது. ஆசனூர் போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு சென்று
போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி