செம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்

52பார்த்தது
ஈரோடு முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கார்த்திக் தலைமை வகித்தார்.
மாவட்டத் துணைத் தலைவர் சேகர் முன்னணி வகித்தார்.


இந்த போராட்டத்தின் போது ,
திமுக வின் தேர்தல் வாக்குறுதியில்
311 வது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ,
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் சென்னையில் போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

மேலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி