மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்க இயக்குனரகம் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், அமலாக்கத்துறை துணை இயக்குநர் பானுப்பிரியா வியாழக்கிழமை(மே 9) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். "தேர்தலுக்கான பிரச்சார உரிமை அடிப்படை, அரசியலமைப்பு அல்லது சட்டப்பூர்வ உரிமை அல்ல," என்று அவர் கூறினார். இந்த வழக்கு இன்று(மே 10) விசாரணைக்கு வருகிறது.