அட்சய திருதியை ஒட்டி தங்கம் விலை உயர்ந்தது!

587பார்த்தது
அட்சய திருதியை ஒட்டி தங்கம் விலை உயர்ந்தது!
அட்சய திருதியை நாளான இன்று(மே 10) மக்கள் ஆர்வத்துடன் தங்கம் வாங்கி மகிழ்ச்சி அடைவார்கள். இந்த நாளில் தங்கம், வெள்ளிப் பொருட்கள் வாங்கினால் பொன், பொருள் மேலும் சேர்ந்து பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என மக்கள் நம்புகிறார்கள். அந்த வகையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,660-க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.88.40-க்கும், 8 கிராம் ரூ.707.20-க்கும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி