டொனால்ட் டிரம்ப் 34 வழக்குகளில் குற்றவாளி; ஜூலையில் தீர்ப்பு

79பார்த்தது
டொனால்ட் டிரம்ப் 34 வழக்குகளில் குற்றவாளி; ஜூலையில் தீர்ப்பு
வணிக மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 34 குற்றச்சாட்டுகளில் ட்ரம்ப் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் நேற்று (மே 30) தீர்ப்பளித்தது. டிரம்ப் மீதான ஒவ்வொரு வழக்குக்கும் சுமார் நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் வகையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜூலை 11ஆம் தேதி நீதிமன்றம் தண்டனை விவரத்தை அறிவிக்க உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், திடீர் திருப்பமாக அவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதிக்கவுள்ளது.

தொடர்புடைய செய்தி