ஆயக்குடியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் இன்று திறக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இளநீர், தர்பூசணி, மாம்பழம், வாழைப்பழம், மோர் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பழங்களை பெற்றுச் சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரூர் செயலாளர் சசிகுமார் செய்திருந்தார்