பழநி இட்டேரி ரோடு பகுதியில் நகராட்சி கட்டுப்பாட்டில் காய்கனி கமிஷன் மண்டி கடைகள் செயல்பட்டு வருகிறது. வாகனத்திற்கு ரூ. 25 சுங்க கட்டணமாக பெற்று வந்த நிலையில் ரூ. 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சரக்கு மூடை , பெட்டிக்கு தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர டூவீலர், டிராக்டர், மாட்டு வண்டிகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு வாகனத்திற்கு ரூ. 300 முதல் ரூ 500 வரை செலுத்த வேண்டியுள்ளதால் வாகன ஓட்டுனர் , விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதாக கூறி , நேற்று முன் தினம் கமிஷன் மண்டி வளாகம் முன்பு வாகனங்களை நிறுத்தி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதனம் செய்து அனுப்பினர். இந்நிலையில் நேற்று விவசாயிகள் , வாகன ஓட்டுநர்கள் கமிஷன் மண்டியை புறக்கணித்து ஜவகர் நகர் தனியார் நிலத்தில் காய்கறிகளை ஏலம் விட்டனர்.